null
ரன் குவிக்க தடுமாறும் ரிஷப் பண்ட்.. இன்னைக்கு என்ன பண்ண காத்திருக்கானோ- கலாய்க்கும் ரசிகர்கள்
- மும்பைக்கு எதிரான இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- இதற்கு முன் விளையாடிய மூன்று போட்டிகளில் ரிஷப் பண்ட் மொத்தமாக 17 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
2025 ஐபிஎல் தொடரில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 203 ரன்கள் எடுத்தது. என்ன தான் லக்னோ அணி 200 ரன்களுக்கு மேல் குவித்தாலும் அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் அவரது தடுமாற்றம் தொடர்கிறது. இதுவரை ஆடிய மூன்று போட்டிகளில் ரிஷப் பண்ட் மொத்தமாக 17 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இதனால் தொடர்ந்து சொதப்பி வரும் ரிஷப் பண்டுக்கு இந்த போட்டி முடிந்தபிறகும் அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா சில அறிவுரைகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு போட்டி முடிந்தவுடனும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மைதானத்திலேயே பன்மொழிக் உடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபடுகிறார். மிகவும் கோபமாக பேசுகிறார். இதுபோன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் வெளியாகி வருகின்றன.
இந்த சம்பவத்தை வைத்து ரிஷப் பண்டை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இன்றைக்கு என்ன பன்ன காத்திருக்கானோ தெரியல என்ற வடிவேலு கமெடி டயலாக்கை வைத்தும் சிவாஜி படத்தில் ஆபீஸ் ரூமுக்கு வாங்க என்ற டயலாக்கை வைத்து பண்டை கலாய்த்து வருகின்றனர்.