கிரிக்கெட் (Cricket)
null

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கம்பேக் கொடுக்கும் ரோகித்- விராட்?

Published On 2025-10-03 21:45 IST   |   Update On 2025-10-03 22:04:00 IST
  • ஆஸ்திரேலியாவில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.
  • இந்த தொடருக்கான இந்திய அணியில் ரோகித், விராட் இடம் பெறுவார்களா என்பது நாளை தெரிய வரும்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி. இருவரும் டெஸ்ட் மற்றும் டி20 வடிவங்களில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், இப்போது அவர்கள் ஒருநாள் போட்டிக்கு மட்டும் ஆடும் வீரர்களாக உள்ளனர்.

இவர்கள் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து நீடிப்பார்களா என்ற கேள்வி விவாதப் பொருளாக உள்ள நிலையில், இந்த இரண்டு சீனியர் வீரர்களும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு தயாராக உள்ளனர். ஆனால், அவர்களை பிசிசிஐ தேர்வுக்குழு, ஆஸ்திரேலியா தொடருக்கு தேர்வு செய்யுமா? என்ற தகவல் நாளை வெளியாக உள்ளது.

ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான அதிகாரப்பூர்வ விளம்பர டீசரை (Official Promotional Teaser) ஒளிபரப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். அதில், கோலி மற்றும் ரோகித் சர்மாவின் புகைப்படங்கள் பிரதானமாக இடம்பெற்றுள்ளன. இதுவும் அவர்கள் அணியில் இருப்பது உறுதி என்பதற்கான அடையாளம் என்று நம்பப்படுகிறது.

 

ரோகித் சர்மாவை பொறுத்தவரை மார்ச் மாதம் சாம்பியன்ஸ் டிராபியில் வெற்றி பெற்றதில் இருந்து, ஒருநாள் அணியின் கேப்டன்சி பொறுப்பில் பெரிய தோல்விகளைச் சந்திக்கவில்லை. அவர் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தினால், அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கத் தேர்வாளர்களுக்கு எந்தக் காரணமும் இல்லை. கோலி, பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு சதம் அடித்திருந்தார். ரோகித் ஃபைனலில் நியூசிலாந்துக்கு எதிராக வெற்றிக்கு உதவிய ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News