உலகக் கோப்பையை வெல்ல 13 வருடம் எடுத்துக் கொள்ளும் என நினைக்கவில்லை: ரோகித் சர்மா
- இந்தியா 2011-ல் உலகக் கோப்பையை வென்றது.
- ரோகித் சர்மா தலைமையில் 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றியது.
இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பையை வாங்கிக் கொடுத்தவர் ரோகித் சர்மா. இவரது தலைமையிலான இந்திய அணி 2024-ல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது. அதற்கு முன்னதாக இந்தியா எம்.எஸ். டோனி தலைமையில் 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றிருந்தது. 13 வருடத்திற்குப் பிறகு இந்தியா உலகக் கோப்பை வென்றுள்ளது.
இது தொடர்பாக ரோகித் சர்மா கூறியதாவது:-
நம்முடைய நிலை கீழ் நோக்கி சென்று கொண்டிருக்கும்போது, அது எப்போதுமே அவ்வாறு சென்று கொண்டிருக்காது என்று எப்போதுமே நான் நம்புவேன். ஒரு காலக்கட்டத்தில் பழைய நிலை திரும்பும். ஆனால், அதற்கு 13 வருடங்கள் எடுத்துக் கொள்ளும் என நான் நினைக்கவில்லை.
2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றோம். அதன்பின் 2024-ல் மீண்டும் கோப்பையை கைப்பற்றினோம். அதற்கு 13 ஆண்டுகள் ஆகின. நாம் 2013-ல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றோம். சரியாக பார்த்தோம் என்றால் 11 வருடம் எடுத்துக் கொண்டது. எனினும், 11 வருடங்களும் மிக நீண்டு காலம்தான்.
இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.