டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களாக குறைக்க ஐ.சி.சி. முடிவு
- சிறிய அணிகளுக்கான டெஸ்டை 4 நாட்களாக குறைப்பது தொடா்பாக விவாதிக்கப்பட்டது.
- டெஸ்ட் போட்டியை நடத்த சிறிய நாடுகள் தயக்கம் காட்டுகின்றன.
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன் சில்) 2019-ம் ஆண்டு அறி முகம் செய்தது. இதுவரை 3 தொடர் முடிந்துள்ளது. நியூசிலாந்து (2019-21), ஆஸ்திரேலியா (2021-23), தென் ஆப்பிரிக்கா (2023-25) ஆகிய நாடுகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றியுள்ளன.
இந்த நிலையில் 2027-29ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சிறிய நாடுகளுக்கான டெஸ்ட்களை 4 நாட்களாக குறைக்க ஐ.சி.சி. தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரத்தில் , இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளும் மாற்றமின்றி வழக்கமான 5 நாட்களுக்கு விளையாடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறிய நாடுகள் விளையாடும் டெஸ்ட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவற்றுக்கான செலவுகளை குறைக்கவும் இந்த முடிவு மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
லண்டனின் லாா்ட்ஸ் மைதானத்தில் கடந்த வாரம் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின்போது, 2027-29 டெஸ்ட் தொடரில் சிறிய அணிகளுக்கான டெஸ்டை 4 நாட்களாக குறைப்பது தொடா்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது, ஐ.சி.சி தலைவா் ஜெய் ஷா இந்த முடிவுக்கு தனது ஆதரவை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தங்களுக்கான அட்ட வணையில் அதிக நாட்களை எடுத்துக் கொள்வதாலும், செலவும் அதிகமாவதாலும் டெஸ்டை நடத்த சிறிய நாடுகள் தயக்கம் காட்டுகின்றன.
ஒரு டெஸ்ட்டுக்கான நாட்களை 5-க்கு பதிலாக 4-ஆக குறைக்கும்போது, 3 போட்டி கொண்ட தொடரை 3 வாரங்களுக்கு உள்ளாக முடிக்க இயலும். இது, அந்த நாடுகள் டெஸ்டை நடத்த உந்துதல் அளிக்கும். குறைக்கப்படும் ஒருநாளின் ஆட்டநேரத்தை சமன் செய்ய ஒரு நாளுக்குள் வீசப்படும் ஓவர்களின் எண்ணிக்கையை 90-ல் இருந்து 98 ஆக அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.