ரஞ்சி டிராபி: 2-வது இன்னிங்சில் 99 ரன்னில் சுருண்ட பெங்கால்- ஜம்மு-காஷ்மீர் இறுதிப் போட்டிக்கு நுழைய பிரகாச வாய்ப்பு
- பெங்கால் முதல் இன்னிங்சில் 328 ரன்களும், ஜம்மு-காஷ்மீர் 302 ரன்களும் சேர்த்தனர்.
- ஜம்மு-காஷ்மீர் வெற்றிக்கு 126 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சி டிராபி அரையிறுதி போட்டிகள் கடந்த 15-ந்தேதி தொடங்கின. மேற்கு வங்கத்தில் உள்ள கல்யாணியில் பெங்கால்- ஜம்மு-காஷ்மீர் அணிகள் மோதும் 2-வது அரையிறுதி போட்டி நடைபெற்று வருகிறது. ஜம்மு-காஷ்மீர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களம் இறங்கிய பெங்கால் முதல் இன்னிங்சில் சுதிப் குமார் கராமி (146) சதத்தால் 328 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் ஜம்மு-காஷ்மீர் 302 ரன்களில் ஆல்அவுட் ஆனது.
16 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் பெங்கால் 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஜம்மு-காஷ்மீரின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியால் 99 ரன்னில் சுருண்டது. அக்யூப் நபி, சுனில் குமார் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.
பெங்கால் அணி 99 ரன்களில் சுருண்டதால் ஜம்மு-காஷ்மீர் அணிக்கு 126 ரன்கள் இலங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 126 இலக்கை எட்டினால் ஜம்மு-காஷ்மீர் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.