கிரிக்கெட் (Cricket)

வாழ்வா? சாவா? போட்டி: இலங்கைக்கு 182 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா

Published On 2026-02-16 20:48 IST   |   Update On 2026-02-16 20:48:00 IST
  • ஆஸ்திரேலியா 8.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 104 ரன்கள் குவித்தது.
  • கடைசி 3 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே அடித்தது.

டி20 உலகக் கோப்பையில் இலங்கை- ஆஸ்திரேலியா இடையிலான போட்டி கண்டியில் நடைபெற்று வருகிறது. ஜிம்பாப்வேவுக்கு எதிராக தோல்வியடைந்ததால், இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி ஆஸ்திரேலியா அணியின் மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மிட்செல் மார்ஷ் 27 பந்தில் 54 ரன்களும், டிராவிஸ் ஹெட் 29 பந்தில் 56 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர்.

கேமரூன் கிரீன் (3), டிம் டேவிட் (6) ஏமாற்றம் அடைந்தனர். ஜோஷ் இங்லிஸ் 27 ரன்களும், மேக்ஸ்வெல் 22 ரன்களும் அடித்தனர்.

ஆஸ்திரேலியா 17 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்திருந்தது. கடைசி 3 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 13 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்துள்ளது.

ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 8.2 ஓவரில் 104 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் விக்கெட்டுகளை மளமளவென இழந்து 200 ரன்களை தாண்ட முடியவில்லை.

Tags:    

Similar News