கிரிக்கெட் (Cricket)

தகுதி இல்லாதவரிடம் பதவி: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரை தாக்கிய அக்தர்

Published On 2026-02-16 12:37 IST   |   Update On 2026-02-16 12:37:00 IST
  • உலக கோப்பையில் தொடர்ச்சியாக 11-வது முறையாக பாகிஸ்தான் அணி தோல்வியடைந்துள்ளது.
  • திறமை இல்லாத ஒருவரிடம் பதவியைக் கொடுத்தால், அவர் அந்த அமைப்பையே அழித்துவிடுவார்.

கொழும்பு:

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்தது.

இதனையடுத்து விளையாடிய பாகிஸ்தான் 18 ஓவரில் 114 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 20 ஓவர் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாகும். மேலும் உலக கோப்பையில் தொடர்ச்சியாக 11-வது முறையாக பாகிஸ்தான் அணி தோல்வியடைந்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வியை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் நேரடியாகத் தாக்கிப் பேசியுள்ளார். அதில், உலகிலேயே மிகப்பெரிய குற்றம் என்ன தெரியுமா? தகுதி இல்லாத ஒருவரிடம் மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைப்பதுதான். திறமை இல்லாத ஒருவரிடம் பதவியைக் கொடுத்தால், அவர் அந்த அமைப்பையே அழித்துவிடுவார். என அக்தர் கூறினார்.

Tags:    

Similar News