கிரிக்கெட் (Cricket)
சுதீப் குமார் கராமி அபார சதம்: முதல் நாளில் பெங்கால் 249/5
- 2வது அரையிறுதிப் போட்டியில் பெங்கால், ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதுகின்றன.
- முதல் நாள் முடிவில் பெங்கால் அணி 5 விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்துள்ளது.
கொல்கத்தா:
ரஞ்சி டிராபி தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில், ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டிக்கான அரையிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின.
பெங்காலில் உள்ள கல்யாணியில் நடக்கும் 2வது அரையிறுதிப் போட்டியில் பெங்கால், ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஜம்மு காஷ்மீர் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, பெங்கால் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 49 ரன்னில் அவுட்டானார்.
சுதீப் சாட்டர்ஜி, சூரஜ் சிந்து ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகினர். ஷபாஸ் அகமது 42 ரன்னில் வெளியேறினார்.
பொறுப்புடன் ஆடிய சுதீப் குமார் கராமி சதமடித்து 136 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், முதல் நாள் முடிவில் பெங்கால் அணி 5 விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்துள்ளது.