கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக் கோப்பை: பணிந்தது பாகிஸ்தான்- இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

Published On 2026-02-15 22:20 IST   |   Update On 2026-02-15 22:20:00 IST
  • பாபர் அசாம் 5 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
  • உஸ்மான் கான் அதிகபட்சமாக 34 பந்தில் 44 ரன்கள் அடித்தார்.

டி20 உலகக் கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி கொழும்பில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் சேர்த்தது. இஷான் கிஷன் 40 பந்தில் 77 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 29 பந்தில் 32 ரன்களும், ஷிவம் துபே 17 பந்தில் 27 ரன்களும் அடித்தனர். ரிங்கு சிங் 4 பந்தில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் அணியில் சயீம் ஆயுப் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. ஹர்திக் பாண்ட்யா முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரின் 4-வது பந்தில் சஹிப்சதா ஃபர்ஹான் ரிங்கு சிங்குடன் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஓவரை ஹர்திக் பாண்ட்யா மெய்டன் ஓவராக வீசினார்

2-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை ஆயுப் சிக்சருக்கு தூக்கினார். 2-வது பந்தில் எல்.பி.பி.டபிள்யூ ஆனார். 5-வது பந்தில் பவுண்டரி அடித்த சல்மான் ஆகா, கடைசி பந்தில் ஹர்திக் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் பாகிஸ்தான் 13 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்த வந்த பாபர் அசாம் 5 ரன்னில் அக்சர் படேல் பந்தில் வெளியேறினார்.

விக்கெட் கீப்பர் உஸ்மான் கான் சிறப்பாக விளையாடி 34 பந்தில் 44 ரன்கள் எடுத்து அக்சர் படேல் பந்தில் ஸ்டம்பிங் ஆனார்.

அதன்பின் பாகிஸ்தான விக்கெட்டுகள மளமளவென சரிந்தது. இதனால் பாகிஸ்தான் 18 ஓவரில் 114 ரன்களில் ஆல்அவுட் ஆகி 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. பும்ரா, அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா 3 போட்டிகளில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

Tags:    

Similar News