துரதிர்ஷ்டம்: 4 நாட்களில் எல்லாம் முடிந்து விட்டது- ரஷித் கான் சொல்கிறார்
- தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 சூப்பர் ஓவர் வரை சென்று ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தது.
- நியூசிலாந்து அணிக்கும் எதிராகவும் தோல்வியடைந்ததால் போட்டியில் இருந்து வெளியேறும் நிலை.
டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி "டி" பிரிவில் இடம் பிடித்துள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பிடித்துள்ளன. டி பிரிவில் இடம் பிடித்துள்ள ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
பொதுவாக 3 போட்டிகள் முடிந்த பின்னர்தான் ஒரு அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா? இல்லையா? என்பது தெரியவரும். ஆனால் ஆப்கானிஸ்தான் அணி முதல் போட்டியில் நியூசிலாந்தையும், 2-வது போட்டியில் தென்ஆப்பிரிக்காவும் எதிர்கொண்டது.
4 நாட்களில் அடுத்த இரண்டு பெரிய அணிகளை சந்தித்து தோல்வியடைந்து அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்த நிலையில் உள்ளது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 சூப்பர் ஓவர் வரை போட்டி சென்ற பின்னர் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி அதிர்ஷ்டம் இல்லாதது என்று அந்த அணியின் கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரஷித் கான் கூறியதாவது:-
பெரிய தவறுகள் எதுவும் நடந்திருக்காதுன்னு நினைக்கிறேன். நாங்க சிறந்த கிரிக்கெட் விளையாடினோம். கொஞ்சம் துரதிருஷ்டம் இருந்தது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நாங்க வெற்றிக்கு ரொம்ப நெருக்கமா இருந்தோம். 2 சூப்பர் ஓவரில் விளையாடினோம். இது நாங்க ரொம்ப முயற்சி பண்ணோம்னு காட்டுதுன்னு நினைக்கிறேன்.
நீங்க எல்லா ஆட்டங்களையும் ஒருதலைப்பட்சமா பார்த்திருப்பீங்க. ஒரு அணியாக, ஒரு பெரிய அணிக்கு எதிராக விளையாட வாய்ப்பு கிடைக்காவிட்டால், அதுதான் நடக்கும்னு நான் நினைக்கிறேன்.
தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்துக்கு எதிராக நாங்கள் அதிக டி20 போட்டிகளில் விளையாடியிருந்தால், இந்த அணி எங்களை எங்கு வெல்ல முடியும், எங்கு சிறப்பாகச் செயல்பட முடியும் என்பது பற்றிய ஒரு யோசனை எங்களுக்கு இருந்திருக்கும். நீங்கள் அவர்களுடன் வருடத்திற்கு ஒரு முறை விளையாடினால், அதுவும் உலகக் கோப்பை போட்டியில். தவறு செய்வதற்கு வாய்ப்பே இல்லாதது அகும்.
நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நான்கு நாட்களில் இரண்டு போட்டிகளில் விளையாடினால், எங்களுக்கு நடந்தது போல உங்கள் உலகக் கோப்பையும் நான்கு நாட்களில் முடிவடையும். நான்கு நாட்களில் இரண்டு போட்டிகளிலும் நாங்கள் தோற்றோம்; நாங்கள் பெரும்பாலும் உலகக் கோப்பையிலிருந்து வெளியேறிவிட்டோம். எனவே, இந்த அழுத்தம் வேறுபட்டது. நீங்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் ஒரு சிறிய தவறு செய்தால், நீங்கள் போட்டியிலிருந்து வெளியேறிவிடுவீர்கள்.
நீங்கள் அவர்களுடன் விளையாடினால், உங்களுக்கு ஒரு யோசனை கிடைக்கும். நீங்கள் விளையாடவில்லை என்றால், அவர்கள் ஒவ்வொரு முறையும் புதிய திட்டமிடலுடன் வருவார்கள்.. நியூசிலாந்தில் நாம் பார்த்தது போல, அவர்கள் ஆக்ரோஷமான மனநிலையுடன் வந்தார்கள்... நாம் அவர்களுக்கு எதிராக எவ்வளவு அதிகமாக விளையாடுகிறோமோ, அவ்வளவு சிறப்பாக செயல்படுவோம் என்று நினைக்கிறேன், உலகக் கோப்பையில் மட்டுமல்ல, இருதரப்பு தொடரிலும்.
நீங்கள் உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் போதெல்லாம், நீங்கள் எப்போதும் முயற்சி செய்கிறீர்கள். ஏனென்றால் உலகக் கோப்பை வெற்றி ஒரு பெரிய விஷயம்.
இவ்வாறு ரஷித் கான் தெரிவித்தார்.