கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக் கோப்பை: டக் அவுட்டான அபிஷேக் சர்மா- இந்தியா பவர் பிளேயில் 52/1

Published On 2026-02-15 19:28 IST   |   Update On 2026-02-15 19:28:00 IST
  • அபிஷேக் சர்மா 4 பந்துகளில் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.
  • இஷான் கிஷன் 25 பந்தில் 42 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

டி20 உலகக் கோப்பையில் இந்திய- பாகிஸ்தான் இடையிலான போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தெர்வு செய்தது. அதன்படி இந்தியாவின் அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

யாரும் எதிர்பார்க்காத வகையில் சல்மான் ஆகா முதல் ஓவரை வீசினார். முதல் இரண்டு பந்தில் இஷான் கிஷன் ஒரு ரன் அடித்தார். அடுத்த 3 பந்துகளில் ரன்கள் ஏதும் அடிக்காத அபிஷேக் சர்மா, கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அவர் ஒரு ரன் கூட அடிக்காமல் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

அடுத்து இஷான் கிஷன் உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியா பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்துள்ளது. இஷான் கிஷன் 25 பந்தில் 42 ரன்களுடனும், திலக் வர்மா 7 பந்தில் 10 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

Tags:    

Similar News