இந்தியா

நாங்கள் சக்திக்கு எதிராக போராடி வருகிறோம்- ராகுல் காந்தி

Published On 2024-03-17 16:35 GMT   |   Update On 2024-03-17 16:36 GMT
  • இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உரையாற்றினார்.
  • ராஜாவின் ஆன்மா மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் இன்று ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் நிறைவு விழா நடைபெற்றது.

இதில், இந்தியா கூட்டணியை சேர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட முக்கிய தலைவர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உரையாற்றினார்.

இப்போது அவர் பேசியதாவது:-

இந்து மதத்தில் சக்தி என்ற வார்த்தை உள்ளது. ஒரு சக்திக்கு எதிராக நாம் போராடுகிறோம். அது என்ன சக்தி என்பது கேள்வி.

ராஜாவின் ஆன்மா மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இல்லாமல் மோடியால் வெற்றிப் பெற முடியாது. இது உண்மை.

ராஜாவின் ஆன்மா மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் மற்றும் நாட்டின் ஒவ்வொரு நிறுவனத்தின் ஆன்மா அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறையிலும் உள்ளது.

மகாராஷ்டிராவை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் காங்கிரசை விட்டு வெளியேறி என் அம்மாவிடம் கதறி அழுதார். 'சோனியா ஜி, இந்த சக்தியை எதிர்த்துப் போராட எனக்கு தெம்பு இல்லை என்பதில் நான் வெட்கப்படுகிறேன். நான் சிறைக்குச் செல்ல விரும்பவில்லை' என்றார்.

ஆயிரக்கணக்கான மக்கள் இப்படி அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News