இந்தியா

சிறுவனை அடித்து நிர்வாணப்படுத்தி 1.5 கி.மீ. ஊர்வலமாக அழைத்துச் சென்ற கும்பல்

Published On 2026-01-18 14:33 IST   |   Update On 2026-01-18 14:33:00 IST
  • மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தை வீதிகள் வழியாக 1.5 கி.மீ தூரம் தரதரவென இழுத்துச் சென்றனர்.
  • நூற்றுக்கணக்கான மக்கள் இதனை வேடிக்கை பார்த்த போதிலும், யாரும் தடுக்க முன்வரவில்லை.

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் 16 வயது சிறுவனை கும்பல் ஒன்று நிர்வாணப்படுத்தி தாக்கி 1.5 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவனும், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். மூன்று மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர்.

பின்னர் அவர்கள் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததை தொடர்ந்து, சிறுவன் சிறையிலும், சிறுமி சீர்திருத்தப் பள்ளியிலும் வைக்கப்பட்டனர் என்று கூறபடுகிறது. 

இந்தச் சம்பவத்தால் சிறுமியின் குடும்பத்தினர் சிறுவன் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளனர்.

சிறையில் இருந்து விடுதலையான சிறுவன், தனது மாற்றுத்திறனாளி தாயுடன் உஜ்ஜைன் இல் இருந்து வெளியேறி தேவாஸ் பகுதியில் வசித்து வசித்து வந்தான்.

தனது தாயின் மருத்துவச் செலவுக்காகப் பணம் திரட்ட இந்த வாரம் உஜ்ஜைன் திரும்பியபோது, சிறுமியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சிறுவனை வழிமறித்துள்ளனர்.

சிறுவனைப் பிடித்து ஆடைகளை கிழித்து நிர்வாணப்படுத்திய கும்பல், சிறுவனின் கைகளைக் கயிற்றால் கட்டி, மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தை வீதிகள் வழியாக 1.5 கி.மீ தூரம் தரதரவென இழுத்துச் சென்றனர்.

நூற்றுக்கணக்கான மக்கள் இதனை வேடிக்கை பார்த்த போதிலும், யாரும் தடுக்க முன்வரவில்லை.

மாறாக, பலர் தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்துள்ளனர்.

இறுதியாக காவல் நிலையத்திற்கு அருகே வந்தபோது சிறுவனை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக சிறுவன் நேற்று முன் தினம் அளித்த புகாரின் பேரில், நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

Tags:    

Similar News