இந்தியா

சுற்றுலா பயணியின் ஐபோனை பறித்த குரங்கு

Published On 2024-01-18 09:13 GMT   |   Update On 2024-01-18 09:13 GMT
  • விலை உயர்ந்த ஐபோனை பறிகொடுத்த பயணி மிகுந்த கவலை அடைந்தார்.
  • ஒரு வாலிபர் தன்னிடம் இருந்த குளிர்பான பாட்டில் ஒன்றை குரங்கிற்கு தூக்கி போட்டார்.

குறும்பு சேட்டைகளுக்கு பெயர் பெற்ற குரங்குகள் சுற்றுலா தலங்களில் பயணிகளின் பொருட்களை தூக்கி சென்ற சம்பவங்களை பார்த்திருப்போம். அதுபோன்ற ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்தரபிரசேத மாநிலம் மதுராவில் அமைந்துள்ள பிருந்தாவனத்தில் எப்போதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். இங்கு ஏராளமான குரங்குகள் சுற்றி திரியும். அவை அடிக்கடி சுற்றுலா பயணிகளின் பொருட்களை தூக்கி செல்வது வாடிக்கையாக உள்ளது. சம்பவத்தன்று அங்கு சுற்றுலா சென்ற பயணி ஒருவரின் ஐ போனை குரங்கு ஒன்று பறித்து கொண்டு பிருந்தாவனம் மதில் சுவர் மீது அமர்ந்து கொண்டது. விலை உயர்ந்த ஐ போனை பறிகொடுத்த அந்த பயணி மிகுந்த கவலை அடைந்தார்.

இதை பார்த்த அங்கிருந்த சிலர் குரங்கிடம் இருந்து ஐ போனை மீட்பதற்காக முயற்சி செய்தனர். அப்போது ஒரு வாலிபர் தன்னிடம் இருந்த குளிர்பான பாட்டில் ஒன்றை குரங்கிற்கு தூக்கி போட்டார். அதை பிடித்த குரங்கு தன்னிடம் இருந்த ஐ போனை கீழே தூக்கி எறிந்தது. உடனே ஐ போனை பறிகொடுத்த நபர் அதனை வேகமாக பிடித்தார். இந்த காட்சிகளை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

அந்த வீடியோ வைரலாகி ஏராளமான பயனர்களின் பார்வைகளை குவித்து வருகிறது.

Tags:    

Similar News