இந்தியா

குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி 2 பெண்களை பலாத்காரம் செய்தவர் கைது

Published On 2023-05-25 09:37 IST   |   Update On 2023-05-25 09:37:00 IST
  • அறையின் ஜன்னல் வழியாக செல்போனில் மர்மநபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.
  • இளம்பெண்கள் 2 பேரும் இதுதொடர்பாக எச்.ஏ.எல். போலீசில் புகார் அளித்தனர்.

பெங்களூரு:

பெங்களூரு நிசர்கா லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ரகுராம்(வயது 42). இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் இளம்பெண்கள் 2 பேர் கணக்காளர் மற்றும் மேலாளராக பணி செய்து வருகின்றனர். அவர்கள் 2 பேரும் ஓட்டலின் தரைத்தளத்தில் உள்ள அறையில் தங்கி வேலை செய்கின்றனர். இந்த நிலையில் இளம்பெண்கள் 2 பேரும் ஓட்டலில் உள்ள குளியல் அறையில் தனித்தனியே குளித்தனர்.

அப்போது குளியல் அறையின் ஜன்னல் வழியாக செல்போனில் மர்மநபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெண், உடனடியாக வெளியே ஓடி வந்துள்ளார். அப்போது தான் ஓட்டல் உரிமையாளர் ரகுராம் செல்போனில் வீடியோ எடுத்தது தெரிந்தது. அதை அழிக்குமாறு அந்த பெண் ரகுராமிடம் கூறினார். அப்போது அவர் வீடியோவை அழிக்க வேண்டும் என்றால், தன்னுடன் உல்லாசமாக இருக்குமாறு கூறி உள்ளார்.

இதையடுத்து அவர் ஓட்டலில் வேலை செய்த 2 பெண்களையும் மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இந்த நிலையில் இளம்பெண்கள் 2 பேரும் இதுதொடர்பாக எச்.ஏ.எல். போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ரகுராமை கைது செய்தனர்.

Tags:    

Similar News