இந்தியா

மோடியை வரவேற்க சித்தராமையாவுக்கு தடை: காங்கிரஸ் கடும் கண்டனம்

Published On 2023-08-26 07:46 GMT   |   Update On 2023-08-26 07:46 GMT
  • பிரதமர் மோடியை வரவேற்க முதல்-மந்திரி சித்தராமையாவோ அல்லது துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரோ வரவில்லை.
  • நெறிமுறைக்கு மாறாக விமான நிலையத்தில் அவரை வரவேற்பதற்கு தடுக்கிறார் என்று கூறப்படுகிறது.

புதுடெல்லி:

வெளிநாட்டில் இருந்து இன்று காலை நாடு திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக பெங்களூர் சென்று சந்திரயான்-3 வெற்றிக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டினார். பெங்களூர் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்க முதல்-மந்திரி சித்தராமையாவோ அல்லது துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரோ வரவில்லை. பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்பதற்கு பிரதமர் மோடி தடை விதித்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும, தகவல் தொடர்பு பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

பிரதமருக்கு முன்பாக இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டியதற்காக காங்கிரஸ் முதல்-மந்திரி மற்றும் துணை முதல்-மந்திரி மீது அவர் மிகவும் எரிச்சல் அடைந்தார். இதனால் நெறிமுறைக்கு மாறாக விமான நிலையத்தில் அவரை வரவேற்பதற்கு தடுக்கிறார் என்று கூறப்படுகிறது. இது மலிவான அரசியல் அன்றி வேறு ஒன்றுமில்லை. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் சந்திரயான்-1 வெற்றிக்காக 22 அக்டோபர் 2008 அன்று அகமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாடு மையத்துக்காக அப்போதைய முதல்-மந்திரி மோடி சென்றதை பிரதமர் மோடி மறந்துவிட்டாரா?

இவ்வாறு அவர்கூறியுள்ளார்.

Tags:    

Similar News