இந்தியா

தெலுங்கானாவில் ஏழு மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

Published On 2024-12-01 10:02 IST   |   Update On 2024-12-01 11:12:00 IST
  • மாவோயிஸ்டு எதிர்ப்பு படையினர் மற்றும் கிரே ஹவுன்ட்ஸ் போலீசார் இணைந்து வனப்பகுதியில் அதிரடி வேட்டை நடத்தினர்.
  • சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளில் முக்கிய தலைவர்களும் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டம், ஏதூர் நகரம் அருகே உள்ள சல் பாகா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. அப்பகுதியில் அட்டகாசம் செய்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கிரே ஹவுன்ட்ஸ் மற்றும் மாவோயிஸ்டு எதிர்ப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

மாவோயிஸ்டு எதிர்ப்பு படையினர் மற்றும் கிரே ஹவுன்ட்ஸ் போலீசார் இணைந்து வனப்பகுதியில் அதிரடி வேட்டை நடத்தினர். அடர்ந்த காட்டுக்குள் போலீசாரை கண்ட மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனை எதிர்த்து போலீசாரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மாவோயிஸ்டுகள் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளில் முக்கிய தலைவர்களும் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News