இந்தியா

பெண் மீது வெட்டுக்கத்தியால் தாக்குதல்... தோழியின் செயலால் நூலிழையில் உயிர்தப்பினார்

Published On 2022-12-03 13:13 GMT   |   Update On 2022-12-03 13:13 GMT
  • சரியான சமயத்தில் தோழி தடுத்திருக்காவிட்டால் தலையில் வெட்டு விழுந்து உயிருக்கே ஆபத்தாகியிருக்கும்
  • போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கொச்சி:

கேரளாவின் கொச்சி நகரில் இன்று பட்டப்பகலில் பெண்ணை கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொச்சி ஆசாத் சாலையில் இன்று காலை 11 மணியளவில் ஒரு வாலிபருக்கும், இரண்டு பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது அந்த வாலிபர் மறைத்து வைத்திருந்த வெட்டுக்கத்தியை எடுத்து திடீரென ஒரு பெண்ணை நோக்கி வெட்டுவதற்கு ஓங்கி உள்ளார். அப்போது உடனிருந்த மற்றொரு பெண் லாவகமாக கையால் தடுத்துள்ளார். இதில் அந்த பெண்ணுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சரியான சமயத்தில் தடுத்திருக்காவிட்டால் அந்த பெண்ணின் தலையில் வெட்டு விழுந்து உயிருக்கே ஆபத்தாகியிருக்கும்.

பாதிக்கப்பட்ட பெண், உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. குற்றவாளி விட்டுச் சென்ற கத்தியை போலீசார் கைப்பற்றினர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News