இந்தியா

சிறுத்தையை பிடித்து கழுத்தை நெரித்த வாலிபர்கள்

Published On 2024-12-05 12:42 IST   |   Update On 2024-12-05 12:42:00 IST
  • சிறுத்தை மூச்சு திணறுவது போன்று வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
  • வீடியோ வைரலான நிலையில், சிலர் கிராம மக்களின் தைரியத்தை பாராட்டினர்.

அடர்ந்த வனப்பகுதிகள், மலையடிவார கிராமங்களுக்குள் அவ்வப்போது கரடி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் புகுந்து பொது மக்களை அச்சுறுத்தும். இதனால் பீதியடையும் பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிப்பார்கள். அதுபோல உத்தரபிரதேசம் மாநிலம் மகராஜ்கஞ் மாவட்டத்தில் உள்ள லால்பூர் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்துள்ளது. இதனால் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் தாங்களே சிறுத்தையை பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி கிராம மக்கள், இளைஞர்கள் ஒன்று சேர்ந்து சிறுத்தையை மடக்கி பிடித்தனர். அப்போது ஒரு இளைஞர் வெறும் கைகளால் சிறுத்தையின் கழுத்தை நெரித்தார். இதனால் சிறுத்தை மூச்சு திணறுவது போன்று வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சிறுத்தையை கையில் வைத்திருந்த சில இளைஞர்கள் அதன் கழுத்தை நெரிப்பதும், கால்களை பிடித்து இழுப்பதும் போன்ற காட்சிகள் அதில் உள்ளன. இந்த வீடியோ வைரலான நிலையில், சிலர் கிராம மக்களின் தைரியத்தை பாராட்டினர். அதே நேரம் சிலர், சிறுத்தையின் கழுத்தை நெரித்த இளைஞர்களை விமர்சித்து பதிவிட்டனர்.

Tags:    

Similar News