இந்தியா
சுகோய் 30 ரக போர் விமானம் மாயம்: விமானப்படை அதிர்ச்சி
- அசாமின் ஜோர்ஹட்டில் இருந்து சுகோய்-30 ரக போர் விமானம் புறப்பட்டது.
- சுமார் 7.42 மணிக்கு ரேடாரில் இருந்து மறைந்ததாக தகவல் வெளியானது.
கவுகாத்தி:
இந்திய விமானப் படையின் சுகோய்-30 ரக போர் விமானம் காணாமல் போனதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தின் ஜோர்ஹட்டில் இருந்து புறப்பட்ட சுகோய்-30 ரக போர் விமானம் சுமார் 7.42 மணிக்கு திடீரென ரேடாரில் இருந்து மறைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
விமானம் காணாமல் போனது குறித்து விமானப்படை குழு ஆய்வு செய்து வருகிறது என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.