இந்தியா
null

பயங்கரவாத தாக்குதல் பற்றி முன்னரே கிடைத்த தகவல்.. காஷ்மீர் பயணத்தை மோடி ரத்து செய்தது ஏன்? - கார்கே

Published On 2025-05-06 15:05 IST   |   Update On 2025-05-06 16:06:00 IST
  • ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காம் தாக்குதல் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு பிரதமருக்கு உளவுத்துறை அறிக்கை அனுப்பப்பட்டது.
  • உளவுத்துறை தோல்வியடைந்ததை ஒப்புக்கொள்ளும் அரசு உயிரிழப்புகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற உளவுத்துறை தகவலை பிரதமர் நரேந்திர மோடி பெற்றதாகவும், அதைத் தொடர்ந்து அவர் அங்கு செல்ல திட்டமிட்டிருந்த பயணத்தை ரத்து செய்ததாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

அதாவது, ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காம் தாக்குதல் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு பிரதமருக்கு உளவுத்துறை அறிக்கை அனுப்பப்பட்டதாக கார்கே தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 22, ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 சுற்றுலாப் பயணிகள், 1 குதிரை ஓட்டி உயிரிழந்தனர்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது,

தாக்குதல் எச்சரிக்கை பற்றி முன்பே அறிந்ததால் பிரதமர் காஷ்மீர் பயணத்தை ரத்து செய்தார். உளவுத்துறை தோல்வியடைந்ததை ஒப்புக்கொள்ளும் அரசு உயிரிழப்புகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.

தாக்குதல் நடக்கவுள்ளதாக மூன்று நாள்களுக்கு முன்பே மோடிக்கு உளத்துறை தகவல் அளித்துள்ளது. தாக்குதல் எச்சரிக்கை பற்றி முன்பே தெரிந்தும் காஷ்மீரில் பாதுகாப்பை பலப்படுத்தாதது ஏன்? என்று கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.  

Tags:    

Similar News