பா.ஜ.க சார்பில் மும்பை மேயராக ரிதுதவ்டே தேர்வு- சிவசேனாவுக்கு துணை மேயர் பதவி: முடிவுக்கு வந்த இழுபறி
- மும்பை மேயர் பதவிக்கான தேர்தல் வருகிற 11-ந் தேதி நடக்கிறது.
- மனுவை வாபஸ் பெறும் நாளில் தான் தேர்தல் நடக்கிறது.
30 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சியில் ஆதிக்கம் செலுத்தி வந்த தாக்கரே குடும்பத்திடம் இருந்து பா.ஜ.க அந்த மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது.
மொத்தம் உள்ள 227 வார்டுகளில் பா.ஜ.க-89, சிவசேனா(ஏக்நாத் ஷிண்டே)-29 இடங்களில் வெற்றி பெற்றன.
பெரும்பான்மைக்கு 114 கவுன்சிலர்கள் தேவை என்ற நிலையில் பா.ஜ.க கூட்டணிக்கு 118 கவுன்சிலர்கள் ஆதரவு உள்ளது. மும்பை மேயர் பதவி தொடர்பாக பா.ஜ.கவுக்கும், துணை முதல் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே வலியுறுத்தியுள்ளார். சுழற்சி முறையில் 2½ ஆண்டுகள் மேயர் பதவி வேண்டும் என்று போர்க் கொடி தூக்கினார்.
மேயர் பதவி தொடர் பாக பா.ஜ.க-ஏக்நாத் ஷிண்டே இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. பா.ஜ.கவுக்கு மேயர் பதவியும், ஏக்நாத் ஷிண்டே சிவ சேனாவுக்கு துணை மேயர் பதவியும் வழங்க முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் மும்பை மேயர் பதவிக்கு பெண் உறுப்பினரான ரிதுதவ்டே பா.ஜ.க பெயரை பரிந்துரை செய்து அறிவித்துள்ளது. ஏக்நாத் ஷிண்டே சிவ சேனா சஞ்சய் சாடியை துணை மேயர் பதவிக்கு பரிந்துரைத்தது.
மும்பை மேயர் பதவிக்கான தேர்தல் வருகிற 11-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று நடக்கிறது. மனுவை வாபஸ் பெறும் நாளில் தான் தேர்தல் நடக்கிறது.
போட்டி இருந்தால் தேர்வு நடைபெறும். பா.ஜ.க-வை சேர்ந்த ரிதுதவ்டே மும்பை மேயராகவும், ஏக்நாத் ஷிண் டேயின் சிவசேனா வேட்பாளர் சஞ்சய் சாடி துணை மேயராகவும் தேர்வாகிறார்கள்.