இந்தியா

சுஹைல்

கேரளாவில் சிறுமியை வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

Published On 2026-02-07 11:10 IST   |   Update On 2026-02-07 11:10:00 IST
  • சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடினர்.
  • பந்தர் பூரில் உள்ள குடிசைப்பகுதியில் தங்கியிருந்த சுஹைலை கைது செய்தனர்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சுஹைல் (வயது20). இவர் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பந்திரங்காவு பகுதியில் வசித்துவரும் தனது குடும்பத்தினரை சந்திக்க வந்திருந்தார்.

அப்போது அவருக்கு, அந்த பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அறிமுகமானார். சம்பவத்தன்று அந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். அதனையறிந்த சுஹைல், சிறுமியின் வீட்டுக்குள் புகுந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனை அந்த சிறுமி யாரிடமும் கூறாமல் இருந்திருக்கிறார்.

இந்தநிலையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டன் காரணமாக, அந்த சிறுமி கர்ப்பமானார். இதையறிந்த சுஹைல் கேரளாவில் இருந்து தப்பிச் சென்றார். வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்ததால் கர்ப்பமானது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, பந்திரங்காவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சுஹைலை வலைவீசி தேடினர். ஆனால், தான் பயன்படுத்திய செல்போன் மற்றும் சிம்கார்டு உள்ளிட்டவைகளை கேரளாவிலேயே கைவிட்டுவிட்டு தப்பியதால் அவர் எங்கு இருக்கிறார்? என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதே நேரத்தில் அவரின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க, கோழிக்கோடு பந்திரங்காவில் தங்கியிருந்த சுஹைலின் உறவினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியபடி இருந்தனர். இந்தநிலையில் அவர் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் பந்தர்பூரில் இருக்கும் தகவல் பந்திரங்காவு போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து உதவி கமிஷனர் பரோக் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். அவர்கள் மகாராஷ்டிரா மாநில போலீசாரின் உதவியுடன் சுஹைலை தேடினர். பந்தர் பூரில் உள்ள குடிசைப்பகுதியில் தங்கியிருந்த சுஹைலை கைது செய்தனர்.

பின்பு அவரை அங்கிருந்து கேரளாவுக்கு அழைத்து வந்தனர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பாமக்கிய விவகாரம் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

Tags:    

Similar News