இந்தியா

அமெரிக்காவுடன் ஒப்பந்தம்: பெண்கள், இளைஞர்களுக்கு லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் - பியூஷ் கோயல்

Published On 2026-02-07 14:53 IST   |   Update On 2026-02-07 14:53:00 IST
  • நரேந்திர மோடியின் தீர்க்கமான தலைமையின் கீழ், இந்தியா-அமெரிக்காவுடன் ஒரு இடைக்கால ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பு எட்டப்பட்டுள்ளது.
  • குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், விவசாயிகள், மீனவர்களுக்கு 30 டிரில்லியன் அமெரிக்க டாலர் சந்தையைத் திறந்துவிடும்.

மத்திய மந்திரி பியூஷ் கோயல் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது:-

நரேந்திர மோடியின் தீர்க்கமான தலைமையின் கீழ், இந்தியா-அமெரிக்காவுடன் ஒரு இடைக்கால ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பு எட்டப்பட்டுள்ளது. இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு 30 டிரில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2,700 லட்சம் கோடி) சந்தையைத் திறந்துவிடும்.

ஏற்றுமதி அதிகரிப்பு நமது பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இந்த ஒப்பந்தம் மக்காச்சோளம், கோதுமை, அரிசி, சோயா, கோழிப்பண்ணை, பால், பாலாடைக்கட்டி, எத்தனால், புகையிலை, சில காய்கறிகள், இறைச்சி உள்ளிட்ட முக்கியமான விவசாய மற்றும் பால் பொருட்களை முழுமையாகப் பாதுகாப்பதன் மூலம் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், கிராமப்புற வாழ்வாதாரங்களைத்தக்க வைப்பதற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.

இந்த ஒப்பந்தம் நமது மக்களுக்கும் வணிகங்களுக்கும் நிலையான வளர்ச்சிக்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்த ஒன்றிணைந்து செயல்படுவதில் இந்தியாவும் அமெரிக்காவும் கவனம் செலுத்த உதவும் என்று தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News