நான் செல்போன் மற்றும் இணையத்தை பயன்படுத்துவதே இல்லை - அஜித் தோவல் சொன்ன சீக்ரெட்
- பாகிஸ்தானில் இந்திய உளவாளியாக இருந்துள்ளார்.
- சாதாரண மக்களுக்குத் தெரியாத பல ரகசியத் தகவல் தொடர்பு முறைகள் எங்களிடம் உள்ளன.
2014 முதல் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரா அஜித் தோவல் உள்ளார்.
1968 கேரளா கேடர் ஐபிஎஸ் அதிகாரியான தோவல் பாகிஸ்தானில் இந்திய உளவாளியாக இருந்துள்ளார். 2016 சர்ஜிக்கல் ஸ்டிரைக் உள்ளிட்ட பல பாதுகாப்பு நடைவடிக்கைகளில் பங்காற்றியுள்ளார்.
அண்மையில் டெல்லியின் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளைஞர்கள் மத்தியில் உரையாற்றிய தோவல், " நான் இணையத்தை பயன்படுத்துவதில்லை.
தனிப்பட்ட குடும்ப விஷயங்களுக்காகவோ அல்லது வெளிநாட்டுத் தலைவர்களுடன் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலோ தவிர, நான் போனைப் பயன்படுத்துவதில்லை.
செல்போன் மற்றும் இணையம் இல்லாமலேயே எனது பணிகளை என்னால் திறம்படக் கையாள முடிகிறது. சாதாரண மக்களுக்குத் தெரியாத பல ரகசியத் தகவல் தொடர்பு முறைகள் எங்களிடம் உள்ளன" என்று தெரிவித்தார்.
அஜித்தோவல் பெயரில் சமூக வலைதளங்களில் பல போலி கணக்குகள் உலா வருகின்றன. இது குறித்துப் பேசிய அவர், தனக்கு எந்த ஒரு அதிகாரப்பூர்வ சமூக வலைதளக் கணக்கும் இல்லை என்று தெரிவித்தார்.
நாட்டின் மிக உயரிய பாதுகாப்புப் பொறுப்பில் இருப்பதால், சைபர் தாக்குதல்கள் மற்றும் ஒட்டுக் கேட்பு போன்ற அபாயங்களைத் தவிர்க்க அவர் இந்த பழக்கத்தை கடைபிடிக்கிறார் என்று கருதப்படுகிறது.