இந்தியா

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு நடந்ததால் தூக்கத்தை இழந்த காங்கிரஸ்: பிரதமர் மோடி தாக்கு

Published On 2025-11-02 17:08 IST   |   Update On 2025-11-02 17:08:00 IST
  • ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றிக்குப் பிறகு நாடு பெருமிதம் கொண்டது.
  • ஆனால் காங்கிரசும் அதன் கூட்டாளியான ராஷ்டிரீய ஜனதா தளமும் அதை விரும்பவில்லை.

பாட்னா:

பீகாரின் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ராவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

காங்கிரஸ், ஆர்ஜேடி ஆகிய கட்சிகள் பீகாரின் அடையாளத்தை அழிக்க விரும்புகின்றன.

வாக்காளர்கள் இரண்டு கட்சிகளைப் பற்றி விழிப்புடன் இருக்கவேண்டும்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றிக்குப் பிறகு நாடு பெருமிதம் கொண்டது. ஆனால் காங்கிரசும் அதன் கூட்டாளியான ராஷ்டிரீய ஜனதா தளமும் அதை விரும்பவில்லை.

பாகிஸ்தானில் குண்டுவெடிப்புகள் நடந்தன. ஆனால் காங்கிரஸ் அரச குடும்பத்தினர் தூக்கமில்லாத இரவுகளைக் கழித்தனர். சிந்தூர் நடவடிக்கையின் அதிர்ச்சியிலிருந்து பாகிஸ்தானும், காங்கிரஸ் ஆதரவாளர்களும் இன்னும் மீளவில்லை.

ஜம்மு காஷ்மீரில் எந்த அரசாங்கமும் 370-வது பிரிவை ரத்துசெய்ய முடியாது. ஆனால் நான் ஒரு உத்தரவாதம் அளித்து அதைச் செய்தேன்.

பீகார் விரைவில் கிழக்கு இந்தியாவின் ஜவுளி மற்றும் சுற்றுலாவின் முக்கிய மையமாக மாறும். பீகார் இளைஞர்கள் அனைவரும் சொந்த மாநிலத்தில் பணியாற்ற வேண்டும். மாநிலத்தை பெருமைப்படுத்த வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

தேர்தலுக்கு பிறகு ஆர்.ஜே.டி. மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் மோதி கொள்ளும். ஆர்.ஜே.டி. கட்சியைச் சேர்ந்த தேஜஸ்வியை முதல் மந்திரி வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் விரும்பவில்லை. இரண்டு கட்சிகள் இடையே மிகப்பெரிய உட்கட்சி மோதல் நடந்து வருகிறது.

மகா கூட்டணியின் தேர்தல் அறிக்கை பொய்களின் மூட்டையாக இருக்கிறது. பொய்கள், வஞ்சகம் மறறும் மக்களை ஏமாற்றுவதை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

வரும் ஆண்டுகளில் ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

Tags:    

Similar News