செய்திகள்

டெல்லி கூட்டத்தில் பங்கேற்க திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சோனியா காந்தி கடிதம்

Published On 2019-05-16 03:34 GMT   |   Update On 2019-05-16 03:34 GMT
டெல்லியில் 23-ம் தேதி நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி:

மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்கான அதிரடி நடவடிக்கைகளை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா தொடங்கியுள்ளார்.

முதல் கட்டமாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள மாநில கட்சிகள் மற்றும் பா.ஜ.க.வுக்கு எதிராக இருக்கும் கட்சிகள் அனைவருக்கும் சோனியா ஒரு கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

அந்த கடிதத்தில், டெல்லியில் வரும் 23-ம் தேதி ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளேன். எதிர்கால அரசியல் பற்றி அதில் விவாதிக்கப்பட உள்ளது. அதில் அவசியம் கலந்து கொள்ள வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.



இந்நிலையில், டெல்லியில் 23-ம் தேதி நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

இதேபோல், பிஜூ ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி உள்ளிட்ட கட்சிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் 23-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், முக்கிய மாநில கட்சிகளின் தலைவர்கள் அனைவரையும் டெல்லியில் ஒன்றுதிரட்ட சோனியா அழைப்பு விடுத்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Tags:    

Similar News