உலகம்
சீன டிரோன்களுக்கு நிரந்தர தடை - அமெரிக்கா உத்தரவு
- சீனாவில் இருந்து இறக்குமதியாகும் டிரோன்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக புகார் எழுந்தது.
- உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்:
அமெரிக்காவில் போலீசார் மற்றும் ராணுவத்தினர் கண்காணிப்பு மற்றும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
சீனாவில் இருந்து இறக்குமதியாகும் டிரோன்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும் எனவே அதற்கு தடைவிதிக்க வேண்டும் என புகார் எழுந்தது.
இதனைதொடர்ந்து நாட்டின் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் சீன டிரோன்களுக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், தரவு பாதுகாப்பு கவலைகளை சீரமைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.