உலகம்

இஸ்ரேல் அதிபர் வருகைக்கு சிட்னியில் எதிர்ப்பு: ஆயிரக்கணக்கில் திரண்டு ஆர்ப்பாட்டம்

Published On 2026-02-11 05:02 IST   |   Update On 2026-02-11 05:02:00 IST
  • இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
  • அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கில் திரண்டு சிட்னி நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிட்னி:

இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். போண்டாய்க் கடற்கரையில் கடந்த ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர். அங்கு சென்ற இஸ்ரேல் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்.

காசா போருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாகின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஆயிரக்கணக்கில் திரண்டு சிட்னி நகரில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.

அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கலகலப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் அகற்ற முற்பட்டபோது வன்முறை ஏற்பட்டது. அவர்களை அமைதி காக்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து, 27 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

அமைதியான முறையில் கருத்துகளை முன்வைக்க வேண்டும் என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனிஸ் ஆர்ப்பாட்டக்காரர்களை கேட்டுக் கொண்டார்.

Tags:    

Similar News