செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படை

Published On 2018-10-25 12:59 GMT   |   Update On 2018-10-25 12:59 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #JammuKashmir #TerroristsGunnedDown
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா பகுதியில் உள்ள கீரி என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

அப்போது மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட துவங்கினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் கடுமையான பதிலடி கொடுத்தனர்.

சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலான இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #JammuKashmir #TerroristsGunnedDown
Tags:    

Similar News