செய்திகள்
முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த மோடி
மதச்சார்பற்ற ஜனதா தள முக்கிய தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் பிறந்த நாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #modiwishes #devegowda
புதுடெல்லி:
கர்நாடகாவில் கடந்த 12-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜ.க. 104 இடங்களில் வெற்றி பெற்றது. எனினும் காங்கிரஸ் கட்சியும், மதச்சாற்பற்ற ஜனதா தளமும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். ஆனால், ஆளுனர் பா.ஜ.க.வையே ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மூத்த தலைவரான தேவகவுடா இன்று தனது 85-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள மோடி, ‘நமது முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு வாழ்த்துக்கள், அவரது உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ்வதற்கு இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார். #modiwishes #devegowda
கர்நாடகாவில் கடந்த 12-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜ.க. 104 இடங்களில் வெற்றி பெற்றது. எனினும் காங்கிரஸ் கட்சியும், மதச்சாற்பற்ற ஜனதா தளமும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். ஆனால், ஆளுனர் பா.ஜ.க.வையே ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.
ஆளுனரின் இந்த முடிவை எதிர்த்து காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவதற்காக பா.ஜ.க. கடும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.