செய்திகள்

பொய் பிரசாரம் செய்யும் ஸ்டாலின், இளங்கோவன் மீது வழக்கு தொடரப்படும்- ஓபிஎஸ் பேட்டி

Published On 2019-04-15 09:30 GMT   |   Update On 2019-04-15 09:30 GMT
தேர்தல் பிரசாரத்தில் பொய்யான குற்றச்சாட்டை கூறி வரும் மு.க.ஸ்டாலின் மற்றும் இளங்கோவன் மீது வழக்கு தொடரப்போவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #LokSabhaElections2019 #MKStalin #EVKSElangovan
தேனி:

தேனியில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

மேகதாது அணை கட்ட தேனியில் இருந்து நான் மணல் அனுப்புவதாக தேனி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பிரசாரத்தின்போது பேசி உள்ளார். மேகதாதுவுக்காக நான் மணல் அனுப்புவதாக அவர் கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.


அவதூறு பரப்பும் வகையில் அவர் இவ்வாறு பேசியது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் தந்துள்ளேம். பிரசாரத்தின்போது தவறான தகவலை கூறுவோர் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவதூறு பரப்பும் இளங்கோவன் மீது வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளோம். தேர்தல் பிரசாரத்தில் கூறும் பொய்யான குற்றச்சாட்டுகளை மக்கள் நம்ப மாட்டார்கள்.

இதேபோல் பத்திரிகை செய்தியை சுட்டிக்காட்டி பொய்யான குற்றச்சாட்டை கூறும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதும் வழக்கு  தொடரப்படும். காவிரி விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் வரலாற்று பிழையை செய்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

வாரிசு அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், தகுதியான நபராக இருந்தால் வாரிசு அரசியலில் எந்த தவறும் இல்லை என்றார். #LokSabhaElections2019 #MKStalin #EVKSElangovan
Tags:    

Similar News