உள்ளூர் செய்திகள்

கோவையில் ரூ.2 லட்சம் மோசடி செய்த இளம்பெண் கைது

Published On 2023-06-14 14:41 IST   |   Update On 2023-06-14 14:41:00 IST
  • சீட்டு கம்பெனியினர் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தியுள்ளனர்.
  • ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சீமான் இதுகுறித்து காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

கோவை,

கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் சீமான் (வயது 48) . இவர் கேட்டரிங் வேலை செய்து வருகிறார்.

இவர் கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் சீட்டு கம்பெனியில் கடந்த 2 ஆண்டுகளாக மாதம் ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் வரை பணம் கட்டியுள்ளார்.

இந்நிலையில் சீமான் தனது சொந்த செலவுக்காக சீட்டு கம்பெனியில் தான் கட்டிய பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் சீட்டு கம்பெனியினர் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அவர் காந்திபுரத்தில் உள்ள சீட்டு கம்பெனிக்கு நேரில் சென்றார்.

அங்கே போய் பார்த்தபோது சீட்டு கம்பெனி பூட்டி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சீமான் இதுகுறித்து காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீட்டு கம்பெனியை நடத்தி வந்த சிறுமுகையை சேர்ந்த சத்யபிரியா (31) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இதில் தொடர்புடைய கிருஷ்ணசாமி, டேவிட் சுந்தரராஜன் ஆகிய 2 பேரையும் காட்டூர் போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News