வாலிபருக்கு அரிவாள் வெட்டு; 4 பேர் கைது
- வாலிபரை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி
திருத்தங்கல் அண்ணா காலனியை சேர்ந்தவர் முத்துக்குமார் என்ற சப்பானி (வயது 18). இவர் சம்பவத்தன்று குறிச்சி குளம் கண்மாய் பகுதியில் நண்பர்களுடன் மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜன், சுரேஷ் லிங்கம், பிரவீன்குமார், பாலாஜி, கார்த்திக் ஆகிய 5 பேர் முன்விரோதம் காரணமாக முத்துக்குமாரை அரிவாளால் வெட்டினர்.
இதனை தடுக்க வந்த நண்பர்களையும் அந்த கும்பல் தாக்கியது. இதுதொடர்பாக திருத்தங்கல் போலீசில் புகார் செய்யபட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை அரிவாளால் வெட்டிய நாகராஜன், சுரேஷ் லிங்கம், பிரவீன்குமார், பாலாஜி ஆகிய 4 பேரை கைது செய்தனர் கார்த்திக்கை தேடி வருகின்றனர்.
சாத்தூர் அருகே உள்ள அச்சங் குளத்தைச் சேர்ந்தவர் மதன்குமார் (24). விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகரான இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் ஒட்டப்பட்டிருந்த புதிய பாரதம் கட்சியின் போஸ்டரை கிழித்து தாக கூறப்படுகிறது. இதனை அக்கட்சியை சேர்ந்த பவர் சிங், ஸ்டாலின், பீட்டர் பாண்டியன் ஆகியோர் கண்டித்துள்ளனர் அப்போது மூணு பேரு தன்னை தாக்கியதாக மதன்குமார் ஏழாயிரம்பண்ணை போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.