உள்ளூர் செய்திகள்

பல்லடத்தில் அரசு பள்ளி கட்டிடம் புதுப்பிக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்ற போது எடுத்த படம் .

அரசு பள்ளி கட்டிடத்தை புதுப்பிக்கும் பணிக்கு பூமி பூஜை

Published On 2022-06-07 10:15 GMT   |   Update On 2022-06-07 10:15 GMT
  • 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
  • பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சிலர் கட்டடத்தை சீரமைக்க முன் வந்தனர்.

பல்லடம்:

பல்லடம் வடுகபாளையத்தில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 1956ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அப்போதைய தமிழக முதல்வர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட பெருமைக்குரிய இந்தப்பள்ளியின் கட்டடம் ஒன்று மிகுந்த சேதமடைந்து இருந்தது.

இதனை பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சிலர் கட்டடத்தை சீரமைக்க முன் வந்தனர். இது குறித்து கடந்த மாதம் முன்னாள் மாணவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் ரூ.30 லட்சம் செலவில் அரசுப் பள்ளி கட்டடத்தை ஸ்மார்ட் வகுப்பறையாக மாற்றி தரைத்தளத்திற்கு டைல்ஸ் கற்கள் பதிப்பது, அருகில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் விளையாட்டு மைதானத்தை தூய்மைப்படுத்தி நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் சீரமைப்பது என முடிவு செய்யப்பட்டது.

இப்பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் அமைப்பு நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம், திண்டு பாலு, சத்தியமூர்த்தி, ரமேஷ்குமார், மோகனகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் நகர தி.மு.க.பொறுப்பாளர் ராஜேந்திரகுமார், நகராட்சி கவுன்சிலர்கள் தண்டபாணி, சசிரேகா ரமேஷ்குமார்,ஆசிரிய,ஆசிரியைகள்,பெற்றோர்கள்,மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News