தமிழ்நாடு செய்திகள்

சட்டசபையில் ஆளுநரின் மைக் அணைக்கப்பட்டதா? - அமைச்சர் ரகுபதி விளக்கம்

Published On 2026-01-20 11:48 IST   |   Update On 2026-01-20 11:48:00 IST
  • எதிர்க்கட்சிகளே சொல்லாத பொய்யை ஆளுநர் தனது அறிக்கையில் கூறி இருக்கிறார்.
  • இந்தியாவில் தலைசிறந்த 100 பல்கலைக்கழங்களில் 18 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன.

சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் உரையை வாசிக்காமல் இந்த ஆண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். 4-வது ஆண்டாக இந்த ஆண்டும் உரையை படிக்காமல் ஆளுநர் வெளியேறி உள்ளார்.

சட்டசபையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடவில்லை என குற்றம்சாட்டி உள்ள ஆளுநர், தமிழக அரசின் மீது 13 குற்றச்சாட்டுகளை அடுக்கி விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் சட்டசபையில் நடந்தது தொடர்பாக அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவயது:

* மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய ஆளுநர், பா.ஜ.க.வின் பிரதிநிதியாக சட்டசபைக்கு வந்துள்ளார்.

* முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதும் இறுதியில் தேசிய கீதம் பாடுவதும் சட்டசபையின் மரபு.

* ஆளுநர் தனது உரையை வாசிக்கும்போது மைக் ஆப் செய்யப்பட்டது என ஆளுநர் மாளிகை கூறியது முற்றிலும் தவறு.

* ஆளுநர் உரையை படியுங்கள் என்று தான் சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார்.

* எவ்வளவு தாழ்மையுடன் கேட்க வேண்டுமோ அவ்வளவு தாழ்மையுடன் கேட்டார் சபாநாயகர்.

* ஆளுநரின் மைக் அணைக்கப்படவில்லை. ஆளுநரின் மைக் அணைக்கப்பட்டதாக கூறியது பச்சை பொய்.

* எதிர்க்கட்சிகளே சொல்லாத பொய்யை ஆளுநர் தனது அறிக்கையில் கூறி இருக்கிறார்.

* தமிழக பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் உள்ளது என்பதை மத்திய அரசே ஒத்துக்கொண்டுள்ளது.

* ஆளுநர் கூறியிருப்பது பொய் என்பதற்கு மத்திய அரசின் புள்ளிவிபரங்களே சாட்சி.

* ஆளுநருக்கு தமிழகத்தின் மீது என்ன வெறுப்பு என்பதை அவர்தான் கூற வேண்டும்.

* ஆளுநர் வெளியேறிய சில நிமிடங்களிலேயே விளக்க அறிக்கை வருகிறது.

* முன்னரே இப்படி ஒரு அறிக்கையை தயாரித்து விட்டு திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர்.

* பெண்கள் மீதான குற்றங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

* பெண்கள் தைரியமாக வந்து புகார் அளிக்கும் நிலையை தமிழக அரசு உருவாக்கி உள்ளது.

* உயர்கல்வி அதிகம் பயிலும் பெண்களை கொண்ட மாநிலம் தமிழ்நாடு.

* மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது அதிக கல்வி வளர்ச்சி கொண்ட மாநிலம் தமிழ்நாடு.

* அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்.

* சிறு குறு தொழில்களில் தமிழகம் பின்தங்கி உள்ளதாக கூறுவது தவறு.

* தமிழ்நாட்டில் கஞ்சா உற்பத்தி கிடையாது. போதைப்பொருட்கள் எந்த மாநிலத்தில் இருந்து வருகிறது என்பது உங்களுக்கே தெரியும்.

* இந்தியாவில் தலைசிறந்த 100 பல்கலைக்கழங்களில் 18 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன.

* ஆண்டுதோறும் 20,000 பேர் தற்கொலை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த எண்ணிக்கையை சரிபார்க்க வேண்டும்.

* தனிமனித தற்கொலைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தனிமனித தற்கொலைக்கு அரசு பொறுப்பாகாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News