உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூரில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

Published On 2023-06-05 05:22 GMT   |   Update On 2023-06-05 05:22 GMT
  • மாவட்டத்தில் மொத்தம் 1,660 பள்ளி வாகனங்கள் இயங்குகின்றன.
  • வருகிற 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

திருப்பூர் :

திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 570 பள்ளி வாகனங்கள், தெற்கு வட்டாரத்தில் 616, தாராபுரத்தில் 208, உடுமலையில் 260 என மாவட்டத்தில் மொத்தம் 1,660 பள்ளி வாகனங்கள் இயங்குகின்றன.

பள்ளி வாகனங்களின் நிலை குறித்து ஆண்டுக்கு ஒரு முறை வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். வருகிற 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் கடந்த மாதம் 10-ந்தேதி திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.பள்ளிகளின் நிலை, படிக்கட்டு உயரம், பஸ்களில் வைக்கப்பட்டுள்ள முதலுதவி வசதி, இருக்கை, வேக கட்டுப்பாட்டு கருவி, தகுதிச்சான்று கால அவகாசம் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.இதுவரை நடந்த ஆய்வில் 40 சதவீதத்துக்கும் அதிகமான வாகனங்கள், இன்னமும் சான்றிதழ் பெறாமல் உள்ளன. இந்நிலையில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மைதானத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.திருப்பூர் வடக்கு போக்குவரத்து துறை சார்பில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.  

Tags:    

Similar News