உள்ளூர் செய்திகள்

தாலிக்கு தங்கம், இலவச மடிக்கணினி உள்ளிட்ட திட்டங்களை நிறுத்தியது தி.மு.க. அரசு

Published On 2024-04-09 06:07 GMT   |   Update On 2024-04-09 10:01 GMT
  • மருத்துவரான நான் உங்களுக்கு தேவையான மருத்துவம் மற்றும் தேவையான உதவிகள் செய்வதற்கு தயாராக உள்ளேன்.
  • மக்கள் நலத்திட்டங்கள் கிடைக்க இரட்டை இலைக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள்.

மேலூர்:

மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சரவணன் மேலூர் அருகே வெள்ளலூர் நாட்டை சார்ந்த மட்டங்கி பட்டி, புலிமலைப் பட்டி, குறிஞ்சிப்பட்டி, அழகிச்சிபட்டி, கோட்டநத்தம்பட்டி, அம்பலகாரன்பட்டி, நயத்தான் பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

முன்னதாக வேட்பாளர் சரவணனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து குலவையிட்டு வரவேற்றனர். அப்போது சரவணன் பேசியதாவது:- கடந்த முறை வெற்றிப் பெற்ற வேட்பாளர் வெங்கடேசன் 4 ஆண்டுகளாக தொகுதி பக்கமே வராதவர். அவருக்கு சினிமாவிற்கு கதை எழுதுவதற்கு மட்டுமே நேரம் உள்ளது. மருத்துவரான நான் உங்களுக்கு தேவையான மருத்துவம் மற்றும் தேவையான உதவிகள் செய்வதற்கு தயாராக உள்ளேன்.

அதிமுக அரசு கொண்டு வந்த தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக அரசு நிறுத்தி வைத்துள்ளது. மக்கள் நலத்திட்டங்கள் கிடைக்க இரட்டை இலைக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தில் பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசன், யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மேலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன் ராஜேந்திரன், கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் வெற்றிச்செழியன், பொருளாளர் அம்பலம் மற்றும் கட்சியினர் தீரளாக பங்கேற்றனர்.

Tags:    

Similar News