உள்ளூர் செய்திகள்

காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Published On 2023-07-10 06:10 GMT   |   Update On 2023-07-10 06:10 GMT
  • காய்கறி மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.
  • தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

சென்னை:

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. எனவே காய்கறி சந்தைகளுக்கான சரக்கு லாரிகளின் வரத்து வெகுவாக குறைந்து உள்ளது. இதனால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதேபோல் பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்நிலையில் தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

காய்கறி மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

Tags:    

Similar News