பண்ருட்டி காந்தி ரோட்டில் வணிகர்கள் தினத்தையொட்டி கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
வணிகர்கள் தினத்தையொட்டி பண்ருட்டியில் கடைகள் அடைப்பு
- வணிகர்கள் மே 5-ந்தேதியை வணிகர் தினமாக கொண்டாடி வருகின்றனர்.
- பண்ருட்டியில் வணிக ர்கள் தினத்தையொட்டி கடைகள் அடைக்க ப்பட்டுள்ளது,
கடலூர்:
பண்ருட்டியில் வணிகர்கள் தினத்தையொட்டி கடைகள் அடைக்க ப்பட்டுள்ளது.
வணிகர்கள் மே 5-ந்தேதியை வணிகர் தினமாக கொண்டாடி வருகின்றனர்.இதையொட்டி ஒவ்வொரு வணிகர் சங்கமும் தங்களது சங்க நிர்வாகிகளை திரட்டி மாநாடு நடத்துகின்றனர்.வியாபாரிகளுக்கு ஏற்படும் இன்னல்கள்,அதை களை வதற்கான ஏற்பாடுகள்கு றித்துஇதில்விரிவாக விவாதிக்கிறார்கள். அது மட்டுமின்றி வியாபாரிகளுக்கு அரசின் சார்பில் என்ன உதவி வேண்டும் என்பது பற்றியும் கோரிக்கை வைக்கின்றனர். இதற்காக பண்ருட்டியில் வியாாரிகள் கடைகளுக்கு விடுமுறை அளித்து மாநாட்டுக்கு செல்கின்றனர். இது தொடர்பாக சங்க செயலாள ர் வீரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிர மராஜா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மாநாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்த நிலையில் அதன்தொடர்ச்சியாக வணிகர்களின் ஒற்றுமையை பறைசாற்றவும் வணிக சகோதரத்தை நிலை நாட்டவும் மே 5-ந்தேதி வணிகர் தினத்தன்று கடைகளுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை வைத்தார். அதை ஏற்று வணிக நிறுவனங்களுக்கு 5-ந்தேதி விடுமுறை அளித்து வணிக ஒற்று மையை உணர்த்திட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறி உள்ளார். மாநாட்டுக்கு செல்லும் வியாபாரிகளின் கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்று காய்கனி வியாபாரிகள் சங்க தலைவர் சிவா தெரிவித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை 40 - வது மாநில மாநாடுஇன்று சென்னை அச்சரப்பாக்கத்தில் நடைபெற உள்ளது.கடைகளுக்கு விடுமுறை அளித்துமாநாட்டுக்கு வரவேண்டும் என்றுமளிகை வியாபாரிகள் சங்க செய லாளர் மோகனகிருஷ்ணன், வணிகர் சங்க பேரவை மாவட்ட செயலாளர் வானவில் ராஜா வேண்டு கோள் விடுத்துள்ளனர்.