உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணி நடந்தது.

அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி பேரணி

Published On 2023-05-09 13:51 IST   |   Update On 2023-05-09 13:51:00 IST
  • வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என விழிப்புணர்வு.
  • அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து விழிப்புணர்வு.

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டை அடுத்த மருதங்காவெளி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கூடுதலாக மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

பிரச்சாரத்தை பேரூராட்சி கவுன்சிலர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

பள்ளி அருகிலிருந்து புறப்பட்ட பிரசார பயணம் சுற்றுப்பகுதியில் உள்ள வீடு, வீடாக சென்று அப்பகுதி மக்களிடம் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்தும் நேரடியாகவும், துண்டு பிரசுரம் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags:    

Similar News