உள்ளூர் செய்திகள்
பாளையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பெயிண்டர் சாவு
- சரவண கார்த்திகேயன் ஐகிரவுண்டு ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- பலத்த காயம் அடைந்த சரவண கார்த்திகேயனை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
நெல்லை:
பாளை சித்திரை வேலைக்கார தெருவை சேர்ந்தவர் சரவண கார்த்திகேயன் (வயது 50), பெயிண்டர். இவர் சம்பவத்தன்று பாளை வடக்கு ஐகிரவுண்டு ரோட்டில் உள்ள கேன்டீன் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சரவண கார்த்திகேயன் கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை சரவண கார்த்திகேயன் இறந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.