ஷிபா மருத்துவமனையில் செவிலியர் தின கொண்டாட்டம்
- விழாவிற்கு ஹாஜி முகம்மது ஷாபி தலைமை தாங்கினார்.
- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நெல்லை:
உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு நெல்லை ஷிபா மருத்துவ மனை மற்றும் இந்திய மருத்துவ கழகம் நெல்லை கிளை சார்பில் ஷிபா மருத்துவமனையில் நடைபெற்ற விழாவிற்கு மருத்துவமனை யின் பங்குதாரர் ஹாஜி முகம்மது ஷாபி தலைமை தாங்கினார். முன்னாள் இந்திய மருத்துவ கழக தலைவர் டாக்டர் பிரேம சந்திரன் கலந்து கொண்டு செவிலியர் தின சிறப்பு செய்தி வழங்கினார்.
இந்திய மருத்துவ கழக தலைவர் டாக்டர் சுப்பிர மணியன், செயலாளர் டாக்டர் முகம்மது இப்ராஹிம், பொருளாளர் டாக்டர் பிரபுராஜ், மருத்துவமனை தலைமை செவிலியர் ஜெமிமா, ஷிபா பாரா மெடிக்கல் கல்லூரி துணை முதல்வர் ஸ்ரீதார ண்யா மற்றும் மருத்துவ மனை எலும்பு மூட்டு மருத்துவர் அகமது யூசுப் ஆகியோர் செவிலியர் தின வாழ்த்து செய்தி வழங்கினர்.
ஷிபா மருத்துவ மனையின் செவிலியர்கள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை ஷிபா மருத்துவ மனையின் மார்க்கெட்டிங் பிரிவினர் செய்திருந்தனர்.