கோவையில் பூட்டிய வீட்டை உடைத்து 29 பவுன் நகை-பணம் கொள்ளை
- தமிழ்ச்செல்வனின் தாயார், கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
- புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை,
கோவை சவுரிபாளையம் கருணாநிதி நகரை சேர்ந்தவர் தமிழ் செல்வன் (வயது 41 ). இவரும், இவரது மனைவியும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். இவரது தாயார் பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழ் செல்வன் மற்றும் அவரது மனைவி இருவரும் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டனர். சம்பவத்தன்று மதியம் வேலைக்கு சென்ற தமிழ்செல்வனின் மனைவி சாப்பிட வீட்டிற்கு வந்தார். சாப்பிட்ட பின்னர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து மகன் வீட்டிற்கு சென்ற தமிழ்ச்செல்வனின் தாயார், கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
அவர் உடனடியாக தனது மகனுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். தமிழ் செல்வன் வீட்டிற்கு வந்து பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அதில் இருந்த 29 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.25,000 பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றிருப்பது தெரி யவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளை யர்களை தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் பூட்டிய வீட்டை உடைத்து நகை திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.