உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

திருவட்டார் அருகே திருமணமான 7 நாளில் புதுப்பெண் மாயம்

Published On 2023-02-01 08:04 GMT   |   Update On 2023-02-01 08:04 GMT
  • கணவர் புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து காணாமல்போனவரை தேடி வருகிறார்கள்.
  • இவர்கள் 2 பேருக்கும் கடந்த 23-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

கன்னியாகுமரி:

திருவட்டார் அருகே வருக்கன் பூவன்விளை, மாத்தூர், அருவிக்கரை பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்பர் (வயது 34), வீரப்புலி பகுதியை சேர்ந்தவர் சோபியா (25). இவர்கள் 2 பேருக்கும் கடந்த 23-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன் கணவர் ஜாஸ்பர் காலையில் வீட்டில் இருந்து வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டில் வந்து பார்க்கும்போது மனைவி சோபியாவை காணவில்லை. உடனே அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் ஆக இருந்தது. இதுபற்றி அக்கம்பக்கம் உள்ள வர்களிடம் விசாரித்தபோது எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேலும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தபோது, காணவில்லை. இதுகுறித்து ஜாஸ்பர் திருவட்டார் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குபதிவு செய்து திருமணமாகி 7 நாளில் மாயமான புதுப்பெண் சோபியாவை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News