தடைகளை உடைத்து முன்னேற வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- ஆராய்ச்சி படிப்புகளை மாணவர்கள் படிக்க வேண்டும் என கூறி வருகிறேன்.
- ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலன் திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் அதிகம்.
கோட்டூர்புரம்:
சென்னை கோட்டூர்புரத்தில் முதலமைச்சரின் தாயுமானவரின் திட்ட விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். மேலும் கபடி விளையாட்டில் அர்ஜுனா விருது பெற்ற மணத்தி கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், சமத்துவ சமுதாயம் அமைய வேண்டும் என்பதே லட்சியம்.
* விளிம்பு நிலையில் இருக்கும் மக்களை முன்னேற்றி முன்னுக்கு கொண்டு வருகிறோம்.
* அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை தி.மு.க. அரசு உறுதி செய்திருக்கிறது.
* ஒரு சமுதாயம் முன்னேற வேண்டும் என்றால் அதற்கு கல்விதான் அடிப்படை.
* அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித் தொகை திட்டம்தான் முக்கியமானது.
* சென்னை, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ரூ.80 கோடி செலவில் மாதிரி விடுதிகள்.
* ஆராய்ச்சி படிப்புகளை மாணவர்கள் படிக்க வேண்டும் என கூறி வருகிறேன்.
* ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலன் திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் அதிகம்.
* உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் பயில அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டம் செயல்படுத்துகிறோம்.
* சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சிக்காக ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
* 9,659 மாணவர்களுக்கு ரூ.90 கோடி அளவுக்கு உதவித் தொகை வழங்கியுள்ளோம்.
* தி.மு.க. ஆட்சியில் 385 மாணவர்கள் தலைசிறந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பயின்று வருகின்றனர்,
* சட்டப்படிப்பு என்பது நமக்கு மிகவும் முக்கியமானது என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
* இவ்வளவு நேரம் நான் பட்டியலிட்ட திட்டங்கள் அனைத்தும் எள் முனையளவுதான்.
* அனைத்து தடைகளையும் உடைத்து நாம் முன்னேற வேண்டும்.
* ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் என்பது உறுதி என்றார்.