உள்ளூர் செய்திகள்

பாம்பு கடித்து தொழிலாளி பலி

Published On 2022-08-10 09:41 GMT   |   Update On 2022-08-10 09:41 GMT
  • ஒலகடம் சந்தை பகுதியில் உட்கார்ந்திருந்தார். அப்போது விஷ பாம்பு ஒன்று கார்த்தியை கடித்தது.
  • இதுகுறித்து வெள்ளிதிருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

பவானி அடுத்த ஒலகடம் ராஜகுமாரனூரை சேர்ந்தவர் கார்த்தி (38). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி, கருத்து வேறுபாட்டின் காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார்.

கார்த்தி அவரது தந்தை சண்முகத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் கார்த்தி கடந்த 8-ந் தேதி ஒலகடம் சந்தை பகுதியில் உட்கார்ந்திருந்தார். அப்போது விஷ பாம்பு ஒன்று கார்த்தியை கடித்தது.

இதனால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு கார்த்தி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வெள்ளிதிருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News