செய்திகள்

திண்டுக்கல் அருகே திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை

Published On 2019-04-20 10:36 GMT   |   Update On 2019-04-20 10:36 GMT
திண்டுக்கல் அருகே குடும்ப பிரச்சினையில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

ஆத்தூர்:

திண்டுக்கல் அருகே சித்தையன்கோட்டை சேடபட்டியை சேர்ந்தவர் வீரக்குமார் (வயது27). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் முத்துலாபுரத்தை சேர்ந்த லதா(22) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின்போது சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டன. சிறிதுகாலம் சந்தோசமாக இருந்த கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனஉளைச்சலில் இருந்த லதா வாழ்வதை விட சாவதே மேல் என தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

அதன்படி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து லதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 6 மாதமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News