செய்திகள்

கொள்கை பிடிப்பு இல்லாதவர் நாஞ்சில் சம்பத்- நடிகை ஜெயதேவி

Published On 2019-03-25 10:22 GMT   |   Update On 2019-03-25 10:22 GMT
நிலையான கொள்கை பிடிப்பில்லாத நாஞ்சில் சம்பத் போன்றோரை மக்கள் என்றும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நடிகை ஜெயதேவி கூறினார்.
சென்னை:

அ.தி.மு.க. செய்தி தொடர்பாளரும், நட்சத்திர பேச்சாளருமான நடிகை ஜெயதேவி விடுத்துள்ள அறிக்கையில், “மறைந்த முதல்வர் அம்மா நாஞ்சில் சம்பத்துக்கு அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவி மற்றும் இன்கோவா கார் வழங்கி அழகு பார்த்தார். அம்மாவின் மறைவுக்கு பின்னால் அவர் துரோகிகள் கூட்டத்தில் சேர்ந்தார்.

நிலையான கொள்கை கோட்பாடு இல்லாத நாஞ்சில் சம்பத் இந்த பாராளுமன்ற தேர்தலில் அம்மாவால் தீயசக்தி என்று அடையாளம் காட்டப்பட்ட கட்சிக்கு ஆதரவளிப்பதாக கூறி உள்ளார். நிலையான கொள்கை பிடிப்பில்லாத இவரைப் போன்றோரை மக்கள் என்றும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று கூறி உள்ளார்.
Tags:    

Similar News