செய்திகள்

சாலைகளை எளிதாக கடந்து செல்ல பள்ளி, கல்லூரிகள் முன்பு ஜீப்ரா கிராசிங் அமைக்கப்படும்- விருதுநகர் கலெக்டர்

Published On 2019-02-06 11:13 GMT   |   Update On 2019-02-06 11:13 GMT
விருதுநகர் புதிய பஸ் நிலையத்தில் கலெக்டர் சிவஞானம் சாலை விபத்துக்களை குறைக்கும் வண்ணம் பாதசாரிகள் சாலைகளை எவ்வாறு கடக்க வேண்டும் என்பது குறித்து பள்ளி மாணவ -மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில், 30-வது சாலை பாதுகாப்பு வார விழா தொடங்கியது. விருதுநகர் புதிய பஸ் நிலையத்தில் கலெக்டர் சிவஞானம் சாலை விபத்துக்களை குறைக்கும் வண்ணம் பாதசாரிகள் சாலைகளை எவ்வாறு கடக்க வேண்டும் என்பது குறித்து பள்ளி மாணவ -மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் சாலை விபத்துக்கள் குறைக்கும் வகையில் பாதசாரிகள் சாலைகளை எவ்வாறு கடக்க வேண்டும் என்பது குறித்தும், சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள ஜீப்ரா கிராஸிங் பயன்பாடு மற்றும் அதனை எவ்வாறு பயன்படுத்துவது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் தற்போது நடைபெற்று வரும் சாலைப் பாதுகாப்பு வார விழாவின் இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக விருதுநகர் பேருந்து நிலையத்திற்கு செல்லும் பாதசாரிகள் சாலையை கடந்து செல்வதற்காக புதிதாக ஜீப்ரா கிராஸிங் அமைக்கப்பட்டு, அதன் பயன்பாடு குறித்தும், அதனை பயன்படுத்தும் விதம் பற்றியும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிவஞானம் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் மாவட்டத்திலுள்ள முக்கிய இடங்களில் உள்ள சாலை சந்திப்புகள் மற்றும் பள்ளி, கல்லூரி அமைந்துள்ள இடங்களில் சாலைகளை பாதசாரிகள் எளிதாக கடந்து செல்வதற்காக ஜீப்ரா கிராஸிங் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன் (விருதுநகர்), மோட்டார் வாகன ஆய்வளர் இளங்கோ, போக்கு வரத்து காவல் ஆய்வாளர் மரிய அருள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News